6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரட்டை சிறுவர்கள் கைது!

வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (14:50 IST)
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு 15 வயதான இரட்டை சகோதரர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
சம்பந்தப்பபட்ட அந்த பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்விட்டு வீட்டுக்கு செல்வதும், பள்ளியில் உள்ள ஆயா தனது சொந்த விஷயங்களுக்காக வெளியே செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
 
ஆயா வெளியே செல்லும் போது தனது பேரனை அழைத்து குழந்தைகளை பார்த்துக்கொள்ள கூறுவதுண்டு. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று அந்த ஆயாவின் பேரன் தனது இரட்டை நண்பர்களை கூட்டு சேர்த்து அந்த 6 வயது சிறுமியை தனி அறையில் அடைத்து பாலியல் தொல்லை குடுத்துள்ளார்கள்.
 
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆயாவின் பேரனான 15 வாயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
 
இதனையடுத்து மீதமுள்ள அந்த இரட்டை சகோதரர்களையும் தொண்டு அமைப்பை சேர்ந்தவர்களின் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்