தூத்துக்குடி மாவட்டத்தில், ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அது குறித்து வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்தால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.
மேலும், ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படாமல் இருந்தாலோ, ரேஷன் விநியோகிஸ்தர்கள், பொது விநியோக பொருட்கள் தீர்ந்துவிட்டதாக மக்களிடம் தவறான கருத்தைக் கூறி, ஏமாற்றினாலோ உடனே அதைப் புகைப்படம் எடுத்து மாவட்ட சப்ளை அதிகாரியின் செல் எண் 94450 00370 க்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். அந்தப் புகார் மீது உடனே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.