தமிழகத்தில், விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் தங்களது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுவை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.