கரூரில் திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட செய்யும் திருநங்கைகளிடம் இருந்து காப்பாற்ற கோரியும், பாதுகாப்பு அளிக்க கோரியும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கரூர் மாவடியான் கோயில் தெருவில் வசிக்கும், ஐந்து திருநங்கைகளை மணவாசியை சேர்ந்த திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும், ஈடுபட்டு வருவதாக கரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மூன்றாம் பாலினமாக எங்களை அறிவித்ததோடு, எங்கள் இனத்திற்கு எஸ்.ஐ வேலைகள் உள்ளிட்ட வேலைகளை செய்து பல நல்ல சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தியவர் என்றும், அவரது அமைச்சர் எங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று குறையாக எடுத்து கூறினர்.