விருப்பமனுவை கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திருநங்கை சுதா, அதிமுகவில் ஏற்கனவே விருப்ப மனு அளிப்பதற்கான தேதி முடிந்துவிட்டாலும், எங்களது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு அளித்துள்ளேன் என்றார்.
முன்னதாக, தமிழகத்தில் திருநங்கைகள் வாழும் சூழ்நிலையை உருவாக்கியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. திருநங்கைகளுக்கு முகவரி கொடுத்தவர் அவர். எனவே, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன் என்றார் திருநங்கை சுதா.