மேள தாளம் முழங்க அதிமுக தலைமை அலுவலகம் வந்த திருநங்கைகள்

வெள்ளி, 18 மார்ச் 2016 (14:32 IST)
வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் கேட்டு திருநங்கை சுதா என்பவர் மேள தாளங்கள் முழங்க அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அவருடன் 50 திருநங்கைகள் துணைக்கு வந்தனர்.


 
 
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை பெற்றுள்ள அதிமுக, தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விருப்பமனுவை தாக்கல் செய்ய வந்தார்.
 
மேல தாளங்களுடன் 50 திருநங்கைகள் அதிமுக அலுவலகம் வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட்டது. பின்னர் போக்குவரத்து காவலர்கள் நெரிசலை சரிபடுத்தினர்.
 
விருப்பமனுவை கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திருநங்கை சுதா, அதிமுகவில் ஏற்கனவே விருப்ப மனு அளிப்பதற்கான தேதி முடிந்துவிட்டாலும், எங்களது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு அளித்துள்ளேன் என்றார்.
 
முன்னதாக, தமிழகத்தில் திருநங்கைகள் வாழும் சூழ்நிலையை உருவாக்கியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. திருநங்கைகளுக்கு முகவரி கொடுத்தவர் அவர். எனவே, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன் என்றார் திருநங்கை சுதா.

வெப்துனியாவைப் படிக்கவும்