காவிரி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்! (வீடியோ)

திங்கள், 17 அக்டோபர் 2016 (09:06 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்துக்கான நீரை தர வேண்டும் என மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் அரசியல் கட்சியினர் மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
 
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினருடன் திமுக, காங்கிரஸ், மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
 
ஒரு சில இடங்களில் பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்று காலை முதல் தொடங்கிய இந்த ரயில் மறியல் போராட்டம் நாளை வரை நடைபெறுகிறது. முக்கியமான ரயில் நிலையங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
திருவாரூர் அருகே கொடிக்காபாளையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் போராட்டம் நடத்தினார். கடலூர் பரங்கிப்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
 
பல ரயில் நிலையங்களில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றந்து. ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்