இந்த ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினருடன் திமுக, காங்கிரஸ், மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பல ரயில் நிலையங்களில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றந்து. ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.