சென்னை, ஆர்.கே. நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பிர் வெற்றிவேல் தனது பதவியை கடந்த மாதம் 17 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.
இந்நிலையில், தண்டையார்ப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி 4 வது மண்டல அலுவலகத்தில், மண்டல அதிகாரியான கே.சவுரிராஜனிடம், தேர்தல் மன்னன் கே. பத்மராஜன் சுயேட்சை வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து. சமுக சேகவர் டிராபிக் ராமசாமி, சுயேட்சை வேட்பாளர் எம். அகமது ஷாஜகான், இந்திய குடியரசு கட்சி ( அம்பேத்கர்) வேட்பாளர் ரவி, இந்திய மக்கள் கட்சி (மதச்சார்பற்றது) வேட்பாளர் ஆர். ஆபிரகாம் ராஜாமோகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.