இயக்குனர் ராஜூமுருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜோக்கர்’. அப்படத்தில் குரு சோமசுந்தரம் என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். சமூக அவலங்களைக் கண்டு மனரீதியாக பாதிக்கப்பட்ட கதாநாயகன், தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு செய்யும் செயல்கள்களை இப்படம் விவரித்திருந்தது. இப்படத்தின் முடிவில் கதாநாயகன் மரணம் அடைவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இப்படம் பற்றி, சமீபத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிராபிக் ராமசாமி “ஜோக்கர் படத்தின் முதல் பாதி என்னுடைய கருத்துகளை பிரதிபலிப்பது போல் இருந்தது. ஆனால் படத்தின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. சமூகசேவை செய்யும் கதாநாயகன் மரணம் அடைவதுபோல் காட்டினால், சமூகசேவை பணியில் இறங்க நினைக்கும் மக்கள் மத்தியில் அது பயத்தை ஏற்படுத்தும்.