தக்காளி விலை திடீர் உயர்வு: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60

வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:15 IST)
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வந்தது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
 
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும் ஆனால் தற்போது 40 லாரிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்