தமிழகம், புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் கொடுமைக்கு இந்தாண்டு பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வெளியே வர தயங்குகின்றனர். இரவு நேரங்களிலும் கடும் புழுக்கம் காணப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் பதிவான வெப்பநிலை வேலூர் 106, மதுரை 105, சென்னை 105, திருச்சி 104, புதுச்சேரி 104, நெல்லை 103 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.