சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு!

புதன், 28 ஜூலை 2021 (19:50 IST)
சென்னையில் நாளை முக்கிய இடங்களில் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது 
 
சென்னை ஐடி கோரி பகுதியில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது 
 
சென்னை போரூர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் சில இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் மின்தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்