சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய இயலாது: சொல்வது பொன்.ராதாகிருஷ்ணன்

வெள்ளி, 2 அக்டோபர் 2015 (01:28 IST)
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணங்களை உடனே ரத்து செய்ய இயலாது, ஆனால், கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்யும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இந்தியா முழுமைக்கும் உள்ள நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் கோடி செலவு செய்து அமைத்துள்ளது. இதற்காத்தான் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.
 
எனவே, இந்த நிலையில், நெடுஞ்சாலைக் சுங்கக் கட்டணங்களை உடனே ரத்து செய்ய இயலாது. ஆனால், நெடுஞ்சாலைக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்