டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு தேதி திடீர் மாற்றம்

செவ்வாய், 20 அக்டோபர் 2015 (23:17 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு, ஜனவரி மாதம் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 

 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 தேர்வு டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், இம்முறை நெட் தேர்வும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டது. இதனால், எந்த தேர்வை எழுதுவது என்ற குழப்பம் விண்ணப்பதார்களிடம் ஏற்பட்டது. இந்த தகவல் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
 
இதனையடுத்து, டிசம்பர் 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 2 தேர்வு, ஜனவரி மாதம் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்