புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 14 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இன்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்.
விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்தத் திட்டமானாலும், அதனை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது, என தெரிவித்துள்ளார்.