மேலும், பூஜை வசதி இல்லாத சுமார் 10,000 சிறு கோயில்களுக்கு தலா 2440 ரூபாய் மதிப்பிலான 5 பூஜைப் பொருட்களை கோயில் பூசாரிகளுக்கு வழங்கினார்.
அத்துடன், கோயில்களில் நடைபெறும் அன்னதானத் திட்டத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 820 பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியத்திற்கான ஆணையை முதல்லர் ஜெயலலிதா வழங்கினார்.