குமரிஅனந்தன் உடல் நலகுறைவுக்கு தமிழக அரசே பொறுப்பு: திருமாவளவன் கருத்து

வியாழன், 11 பிப்ரவரி 2016 (03:30 IST)
குமரிஅனந்தன் உடல் நலகுறைவுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலவைர் குமரிஅனந்தன் சென்னையில் இருந்து குமரியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டிருந்தார். பிப்ரவரி 12ஆம் தேதி அவரது  பயணம் நிறைவு பெற இருந்தது.
 
இந்த நிலையில், அவரது உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
 
இந்த நேரத்தில், குமரிஅனந்தன் முன் வைத்துள்ள மதுஒழிப்பு என்ற கோரிக்கை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அறிவிக்க வேண்டும்.
 
மேலும், குமரிஅனந்தன் உடல் நலகுறைவுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்