பிப்ரவரி 15 - தமாகா வேட்பாளர் நேர்காணல்: ஜி.கே.வாசன் தகவல்

வியாழன், 11 பிப்ரவரி 2016 (23:12 IST)
தமாகா வேட்பாளர் நேர்காணல், பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 

 
சிவகங்கை மாவட்டம், கல்லலில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியாதவது:–
 
தமாகா சார்பில் அதன் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்கள்  சட்ட சபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு கொடுக்கலாம் என்பதால் பலர் ஆர்வத்துடன் விருப்பமனு கொடுத்து வருகின்றனர்.
 
அவ்வாறு விருப்பமனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல்  சென்னையில் பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. சட்ட மன்றத் தேர்தல் கூட்டணி இறுதி முடிவு சுற்றுப் பயணத்தின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்