தமிழகமெங்கும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் பகுதியிலும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இருப்பினும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறையவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனை, இனி இருக்காது என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.