ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சோலையாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.