மாநகராட்சி ஆகிறது மேலும் மூன்று நகராட்சிகள்

ஞாயிறு, 26 மார்ச் 2017 (22:59 IST)
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட மொத்தம் 12 மாநகராட்சிகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் தற்போது மேலும் மூன்று நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்ற  தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று சென்னையை ஒட்டிய  ஆவடி, தாம்பரம், பல்லாவரம்  ஆகிய நகராட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.




 


மேற்கண்ட மூன்று நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்ற சென்னை மாவட்ட நிர்வாகம் இதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் வெகுவிரைவில் இந்த மூன்று நகராட்சிகளும் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எமவே இந்த மூன்று நகராட்சிகளும் மாநகராட்சிகளாக அறிவிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்