எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்ததும் அனைவரும் சொகுசு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர். தாங்கள் கடத்தப்படுகிறோம் என்பதை உணர்ந்த வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்று துணி எடுத்து வருவதாக கூறி தப்பித்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வந்துள்ளனர்.