தேனி அருகே பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகின்றது. நடுநிலையான விஞ்ஞானிகளை கொண்டு திட்டத்தின் சாதகம், பாதகம் ஆகியவைகளை பொது மக்களுக்கு தெரிவித்து மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே திட்டம் தொடங்கப்படவேண்டும்.
இது எதுவுமே நடைபெறாமல் மத்திய அரசு திட்டத்தை தொடங்கியுள்ளது. இது தேவையற்ற திட்டம் ஆகும். இந்த திட்டதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மீத்தேன், அணு உலை, நியூட்ரினோ ஆகிய திட்டங்களை உலக நாடுகள் மூடிக்கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் தொடங்குவது ஏன் என புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.