இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவிக்கு பாலியல் தொல்லை... இளைஞர் கைது!

சனி, 28 ஜனவரி 2023 (18:01 IST)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய தோழியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்  அவரைக் காணவில்லை என மாணவியின் தந்தை போலீஸில் புகாரளித்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மாணவி பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போலீஸார், மாமல்லபுரம் பகுதியில் அப்பெண் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே, அங்கு சென்று விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

மாணவியை கடத்தி வந்து பாலியல்தொல்லை கொடுத்த  இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரைக்  கைது செய்து,   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்