தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து எனது உணவு எனது உரிமை என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் நவம்பர் முதல் தேதி அன்று கருத்தரங்கத்தை நடத்த இருந்தனர்.
இந்த நிலையில், இந்த கருத்தரங்கத்தை நடத்த திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே தலைவர்களும், தொண்டர்களும் முயன்ர போது, காவல்துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்துள்ளதாக கூறி, நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.