பெண் வேடமிட்டு சென்ற நபருக்கு தர்ம அடி

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (21:11 IST)
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி  ஒருவர் பெண் வேடமிட்டு தன் காதலியைப் பார்க்கச் சென்றபோது  அவரை அந்த ஊர் மக்கள்  கட்டி வைத்து அடித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஒருவர் தனது காதலியைப் பார்க்க இரவில் அவர்து ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரைக் கண்டு திருடன் எனக் கூறி அந்த ஊர் மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

பின்னர் அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீஸார் விசாரித்த போது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளதாகவும் அவர் பார்க்கச் சென்ற காதலியின் வயது 19 எனவும் தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்