திமுகவில் கொடி கட்டி பறக்கும் புதிய கூட்டணி

வியாழன், 26 மே 2016 (11:45 IST)
திமுகவில் அதன் தலைவர் கருணாநிதி வழியை பின்பற்றி, ஐ.பெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமாரும் அடியெடுத்துவைத்துள்ளனர்.
 

 
திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று, எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவரது மகன் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்வாக பதவியேற்றார்.
 
அதே போல், ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ஐபெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமார் பழனி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.
 
இதில் என்ன ஒரு ஒற்றுமை என்றால், பதவியேற்றுக் கொண்ட அப்பா - மகன் ஜோடியில் இரண்டு பேருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்