பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி

செவ்வாய், 3 நவம்பர் 2015 (05:17 IST)
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கை சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், காவல் உதவி ஆய்வாளர் சங்கர், பேருந்து நடத்துநர் நமச்சிவாயம் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் மாற்றப்பட்டது. அவர்கள் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், சென்னை அருகே உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் அந்த சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு சார்பில் போலீஸார் வழங்கினர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்