பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கர்நாடக மேகதாதூவில் அணைகட்டும் விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக கலந்து கொண்டதை சுட்டிகாட்டினார். கர்நாடகாவின் நடவடிக்கையை கண்டிப்பதாக தெரிவித்த அவர் எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முழு அடைப்பில் பங்கேற்க போவதில்லை என்று கூறினார்.