இதனால், கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.2 அடியாகும். தற்போது 42 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் 1640 கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றின் கரையோர பகுதிகளான பூதிநத்தம், பார்த்த கோட்டா, ராமாபுரம், பேரண்டப்பள்ளி, கோப சந்திரம், ஆலியாளம், பெத்த கொள்ளு, சின்ன கொள்ளு, தொரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரை யோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.