மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலே மது இல்லா தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை உடனடியாக மூட வேண்டும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை சரிபாதியாக குறைத்து, கடை திறந்திருக்கும் நேரத்தினை குறைக்க வேண்டும்.