இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி பேசியது:-
“தமிழனைச் சீரழிக்க வந்துள்ள மொழி ஆதிக்கத்துக்குப் பெயர் "சஞ்சுகிருதம்“ என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் சொல்லுவார். அதாவது, சம்ஸ்கிருதத்தை அப்படிக் கேலியாக, அதை யாரும் பின்பற்றாதீர்கள் என்று சொல்லுவார்.
பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழிக்காக தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை“ என்று கருணாநிதி கூறினார்.