நாளை முதல் ’’டாஸ்மாக் பார்’’ திறக்க அனுமதி..மதுப்பிரியர்கள் உற்சாகம்!

திங்கள், 28 டிசம்பர் 2020 (19:58 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலை அடுத்து, கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின் கொஞ்சம் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது அரசு. தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்களுக்கு நாளை முதல் 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்களுக்கு நாளை முதல் 50% இருக்கைகளுடன் மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்  சமூக இடைவெளியுடன் இருக்கைகள் இருக்க வேண்டும், அங்கு வருவோர்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும் என இதற்கான நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்