சமூக வலைதளத்தில் மிகவும் துடிப்பாக, பெண்ணியம், மனித உரிமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசும் தமிழச்சி சுவாதி கொலை தொடர்பாக தனது கருத்துக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தனது பதிவில், சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளி ராம்குமார் இல்லை எனவும், கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான் எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே சுவாதியின் தந்தை அவரின் உண்மையான தந்தை இல்லை என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் வழக்கறிஞர் ராமராஜூக்கு பதிலளிக்கும் வலையில் தமிழச்சி சில கருத்துக்கலை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் "தமிழச்சி கூறிய கருத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்த வேண்டும்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிக்கை வெளியிட்டிருப்பதை வரவேற்கிறேன். அவ்வாறான நகர்வுகளை தமிழக காவல்துறை முன்னெடுப்பின் முழு ஒத்துழைப்பையும் ஆதாரங்களையும் தருவதற்கு தயார்.