அதில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு குதிரைகளில் ஒன்றில் சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படி பிடித்திருப்பது போலவும் சிலையை வடிவமைத்திருந்தனர்.
இது சமீபத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில், அங்கிருந்த பிரபாகரன் சிலையை காவல் துறையினர் அகற்றியுள்ளனர். மேலும், சிலையை வடிவமைத்தவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.