கவர்னர்களை வம்புக்கு இழுப்பது அதிகரித்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

சனி, 14 ஜனவரி 2023 (12:03 IST)
கவர்னர்களை வம்புக்கு இழுப்பது அதிகரித்துள்ளது என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
ஒரு சிலர் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர் என்றும் முதலமைச்சர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லிய போதும் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர் என்றும் இது கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
கவர்னரை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்து வருகிறது என்றும் கருத்து வேற்றுமை இருக்கலாம் ஆனால் கவர்னர் உரையுடன் தான் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க வேண்டும் என்பது மரபு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்