தமிழக பாஜக தலைவராக மீண்டும் தமிழிசை: அமித் ஷா அறிவிப்பு

சனி, 6 பிப்ரவரி 2016 (18:58 IST)
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தலைவராக நீடிப்பார் அறிவிக்கப்பட்டுள்ளார்.


 
 
பாரளுமன்ற தேர்தலுக்கு பின் மத்திய இணை அமைச்சரான பொன்.ராதகிருஷ்ண் வகித்த தமிழக பாஜக தலைவர் பதவி தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் தமிழிசை மீண்டும் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கடந்த சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. கட்சியின் தேசிய விரைவில் அதை அறிவிப்பார் எனவும் கூறப்பட்டது.
 
இதனையடுத்து இன்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் மேலும் மூன்று ஆண்டுகள் கட்சியின் தமிழக தலைவராக பணியாற்றுவார் என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்