இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியபோது, ஒத்த கருத்துடைய கட்சிகள் வந்து பேசலாம் என்ற பிரேமலதாவின் அழைப்பை பரிசீலிப்போம் என்றும் தேமுதிகவுடன் இணைந்து செயல்படக் கூடிய வாய்ப்பு கிடைத்தால், அது குறித்து ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.