காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. 1991ஆம் ஆண்டிற்கு பிறகு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதுபோல வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அவர்கள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கி உள்ளனர்.
கர்நாடகத்தில் வாழும் 3 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், அங்கு வன்முறை வெடித்ததால், அவர்கள் தங்களின் திருமணத்தை சொந்த ஊரான திருவண்ணாமலை, விழுப்புரம், செஞ்சியிலேயே நடத்திக் கொள்ள முடிவு செய்து, திருமண வீட்டார் தங்களின் உடமைகளுடன் ஒசூருக்கு வந்தனர்.
கர்நாடகத்தில் இருந்து அத்திப்பள்ளி வரை வரும் தமிழக மக்களை, அங்கிருந்து ஒசூர் வரை இலவசமாக அழைத்து வருவதற்காக தமிழக அரசுப் பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.