தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இதுபோன்ற தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவருக்கு ஆமாம் சாமி போடுபவர்களை மட்டுமே பிடிக்கும். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் சுய அரசியல் இலாபத்திற்கும், தேர்தல்கால வாக்கு வங்கியை மனதில்கொண்டும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதும், கட்டிடங்கள் கட்டப்படுவதும், நீர்வழிச்சாலைகள் அடைக்கப்படுவதும், வசிப்பதற்கு தகுதியில்லாத, தாழ்வான மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வசிப்பிடங்களை அமைத்துக்கொடுப்பதுமென, இயற்கைக்கு எதிரான செயல்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்தேறி வந்ததற்கு இரண்டு ஆட்சிகளும் துணை போயுள்ளன. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குதான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.