சென்னையில் மழை பெய்யலாம் - வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி, 30 மே 2015 (06:16 IST)
இது குறித்து, சென்னையில்  சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டில், வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் சிறய அளவில் மழை இருக்கும்.
 
மாலை வேளைகளில் இதமான சூழல் நிலவும். அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் வெயில் தாக்கம் சில நாட்களுக்கு இருக்கவே செய்யும்.
 
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடி, காற்றுடன் கனமழை பெய்யும். 
அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. 
 
இதே போன்று தென் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடி, காற்றுடன் கனமழை பெய்யும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்