தமிழக சட்டப் பேரவையின் துவங்கிய உடன் திமுக உறுப்பினர்கள் கருப்புத் துண்டு அணிந்து வந்து கலந்து கொண்டனர். அதே போல, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமியும் கருப்பு நிறத்துண்டும், பேட்ஜும் அணிந்து வந்தார். அப்போது, கிருஷ்ணசாமி அவையில் அவர் பேசமுயன்றபோது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், கடுப்பான கிருஷ்ணசாமி சபாநாயகருக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதாகையை எடுத்துக் காட்டினார். இதனையடுத்து, கிருஷ்ணசாமியை அவையிலிருந்து வெளியேற்ற காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.