இந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தேமுதிக எம்.எல்.ஏ.கள் சிலருக்கு தடை உள்ளதால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், எதிர்க் கட்சித் தலைவராக உள்ள விஜயகாந்த் சட்டப் பேரவைக்கு வருவதை தவிர்து வந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப் பேரவைக்கு வந்த தேமுதிக தலைவரும், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த், லாபியில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்பு சபைக்குள்ளே வராமல், அப்படியே வெளியே புறப்பட்டு சென்றார்.