தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் எல்லாம் நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். ஆனால் அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் திமுக அல்லது அதிமுகவோடு தயவு வேண்டி இணைந்துவிடுவார்கள். ஆனால், பாமக இனிமேல் யாரிடமும் கையேந்தாது.
ஆம் ஆத்மி க்சி மற்றும் மம்தா பானர்ஜி போன்றவர்கள் கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் மக்மகள் செல்வாக்கைப் பெற்று ஆட்சியை பிடித்தனர். அதுபோல, பாமக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். இதற்காக திருச்சியில் வரும் 20ஆம் தேதி, நெல்லையில் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி மண்டல மாநாடுகள் நடைபெறும் என்றார்.