அதில், ஜெயலலிதாவுக்கு டயாலசிஸ், கார்டன் ரிப்போர்ட் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தச் செய்தி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. உள்நோக்கத்துடன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
எனவே, இச்செய்தி வெளியிட்ட, நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 500 ம் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.