ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை நேற்று நள்ளிரவில் இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் சிறைபிடித்துள்ளனர். பின்னர் அவர்களை தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர். இதேபோல், கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் விசைப் படகுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறைகளில் உள்ள 29 மீனவர்கள் மற்றும் படகு பழுதானதால் வழிதவறிச் சென்று இலங்கையில் சிக்கித்தவிக்கும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 பேரையும், 53 படகுகளையும் விடுவிக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்