இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெம்பகரை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகன் கோட்டீஸ்வரன், விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் கருணாமூர்த்தி,திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருகே மதுரை தெற்கு, கான்பாளையத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் என்பவரின் மகன் ஆத்மா ராவ்; ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.