எனவே, 2016 ஆம் ஆண்டுக்குப் பின்பு வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவராமல், பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், உச்ச நீதி மன்ற உத்தரவிப்படி, சட்டத்தில் திருத்தம் செய்யவும், பார் கவுன்சில் நடவடிக்கையை கண்காணிக்கவும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், வழக்கறிஞராகப் பதிவு செய்யும் போது, அவர்கள் பிறந்த இடம், படித்த இடம் குறித்தும், குற்றப் பின்னணி உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்றும், குற்றப் பின்னணி இல்லாத வழக்கறிஞரும், 20 வருடங்களுக்கு மேல் பணி புரிந்தவர்கள் மட்டுமே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.