தமிழ்பட கதாநாயகன் மரணம்

திங்கள், 23 நவம்பர் 2015 (10:10 IST)
புதிய தமிழ் படமான  “க க க போ” என்ற திரைப்படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் அருவியில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்தார்.


 

 
அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் புதுமுக நடிகர் கேசவன் நடிப்பில் தயாராகி வந்த படம் க க க போ. சாக்‌ஷி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் மதன்பாப்,சிங்கம் புலி, கருணாஸ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், இப்படத்தின் ஹீரோ கேசவன், படத்த விளம்பரப்படுத்தும் நோக்கில் தான் கலந்து கொண்ட ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண, தனது குடும்பத்துடன் மலேசியா சென்றிருந்தார். அப்போது மலேசியாவின் பி டோர் எனும் பகுதியில் உள்ள அருவியில் குளித்துள்ளார்.
 
அப்போது எதிர்பாராதவிதமாக, அவரின் பெற்றோர்களின் கண் எதிரிலேயே கேசவன் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அதன் பின் அவரின் சடலம் மீட்கப்பட்டது. அவரின் மரணம் க க க போ படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்