கோவில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு நாளை ஆலோசனை!

வெள்ளி, 11 ஜூன் 2021 (08:12 IST)
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இதுகுறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றும் எனது தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் 
 
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்தும், அறங்காவலர் நியமனம் குறித்தும் மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாக கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் சேகர்பாபு முயற்சியால் தமிழில் அர்ச்சனை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்