விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுங்கள்: சபாநாயகரிடம் மனு

புதன், 30 டிசம்பர் 2015 (23:09 IST)
பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சீனிவாசன் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சீனிவாசன், தமிழக சபாநாயகர் தனபாலுக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில், செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும் போது, அநாகரீகமாக நடந்து கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த் , மிரட்டல் விடுத்த தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்